tamilnadu

img

சமையல் எரிவாயு விலை உயர்வு

சென்னை, அக். 2- நாடு முழுவதும் நடப்பு மாதத்துக்கான (அக்டோபர்)  சமையல் எரிவாயு உருளை விலை அறிவிக்கப் பட்டது. இதில் முந்தைய மாதத்தை காட்டிலும் விலை வெகுவாகவே உயர்ந்திருக்கிறது.  சென்னையை பொறுத்தவரையில் கடந்த மாதம் மானியமில்லா சமையல் எரிவாயு உருளை விலை ரூ.606.50 ஆக இருந்தது. தற்போது அது ரூ.620 ஆக உயர்ந்திருக்கிறது. இதன்மூலம் இந்த மாதம் சமையல் எரிவாயு உருளை  விலை ரூ.13.50 அதிகரித்து உள்ளது. வர்த்தகத்துக்கு பயன்படுத்தப்படும் 19 கிலோ  எரிவாயு உருளை விலை கடந்த மாதம் ரூ.1,174.50-ஆக இருந்தது. தற்போது ரூ.24.50 அதிகரித்து, ரூ.1,199 ஆக நிர்ண யிக்கப்பட்டு இருக்கிறது. அதேபோல மானி யமில்லா சிலிண்டர் விலை தில்லியில் ரூ.590 ஆகவும், கொல்கத்தாவில் ரூ.616.50 ஆகவும், மும்பையில் ரூ.562 ஆகவும் இருந்தது. தற்போது முறையே அவை ரூ.15, ரூ.13.5 மற்றும் ரூ.12.5 விலை உயர்த் தப்பட்டு உள்ளது. பெட்ரோல்-டீசல் விலை உயர்வை தொடர்ந்து சமையல் எரிவாயு உருளை  விலையும் உயர்ந்திருப்பது பொதுமக்  களை அதிர்ச்சியடைய செய்திருக்கி றது. சென்னையில் கடந்த மாதம் மானி யத்துடன் கூடிய சமையல் எரிவாயு உருளை ரூ.693.69-க்கு விற்பனை செய்  யப்பட்டு உள்ளது. மானியமாக வாடிக்கை யாளர் வங்கிக்கணக்குக்கு ரூ.87.19 வரவு வைக்கப்பட்டு இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.